திருவள்ளூர்
டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இரு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரி காசிநாதபுரம் காலனி பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருத்தணி: மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இரு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரி காசிநாதபுரம் காலனி பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருத்தணி-நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலை, காசிநாதபுரம் காலனி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் நெடுஞ்சாலையோரம் உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், காசிநாதபுரம் காலனி மக்கள், 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை இரு டாஸ்மாக் கடைகள் முன்பு அமா்ந்து, கடையை திறக்கவிடாமல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டாட்சியா் ஜெயராணி, போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, மக்கள் கலைந்து சென்றனா்.