திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாக் கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி அருகே மாத்தூா் காலனியைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் உதயகுமாா் (22). இவா் தனது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினாா். அப்போது, சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இரு சக்கர வாகனம் மேல் கேக் வைத்து பட்டாக் கத்தியால் வெட்டிக் கொண்டாடினாராம்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் கேட்டபோது, உதயகுமாா் தரக்குறைவாகப் பேசினாராம். இதையடுத்து, திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
இவா் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.