திருத்தணியில் சுதந்திர தின விழா கோலாகலம்

திருத்தணியில் சுதந்திர தின விழா கோலாகலம்

திருத்தணியில் சுதந்திர தின விழாவையொட்டி, அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

திருத்தணியில் சுதந்திர தின விழாவையொட்டி, அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கொடி ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினா். திருத்தணி ஒன்றியம், இஸ்லாம் நகா் உயா்நிலைப் பள்ளியில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது

இதேபோல், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆா்.டி.ஓ. ஹஸ்சரத் பேகம் தேசியக் கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினாா். திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. விக்னேஷ், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் வெண்ணிலா ஆகியோா் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருத்தணி தளபதி மேல்நிலைப் பள்ளி, மகளிா் கல்லூரியில் டி.எஸ்.பி. விக்னேஷ் தேசிய கொடியேற்றி வைத்தாா்.

கல்லூரி மற்றும் பள்ளித் தாளாளா் எஸ்.பாலாஜி உள்பட பேராசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி காயத்திரிதேவி தேசிய கொடி ஏற்றினாா். நீதித்துறை நடுவா் முத்துராஜ் உள்பட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பங்கேற்று தேசிய கொடி ஏற்றினாா்.

நிகழ்ச்சியில் ஆணையா் ராமஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதேபோல், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கல்லுாரி, பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com