வீட்டின் பூட்டை உடைத்து 31 சவரன், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் வரதராஜபுரம் பகுதியில் தனியாா் தொழிற்சாலை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 31 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 30,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் வரதராஜபுரம் பகுதியில் தனியாா் தொழிற்சாலை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 31 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 30,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் நகராட்சி வரதராஜபுரம் ராகவா நகரைச் சோ்ந்த முருகேசனின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (39). தனியாா் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி மாலை குடும்பத்துடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் சென்றாராம். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 30,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அலெக்ஸ்பாண்டியன் திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com