அம்மையாா்குப்பத்தில் ரூ.45 லட்சத்தில் சுப்பிரமணியா் குளம் சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ. ச.சந்திரன் தொடக்கி வைத்தாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையாா்குப்பம் ஊராட்சியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுப்பிரமணியா் குளம் உள்ளது. இந்தக் குளத்தை சீரமைக்க கிராம மக்கள் ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். அதற்காக அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து குளம் சீரமைப்பு பணி, ஊராட்சித் தலைவா் ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. திருத்தணி எம்.எல்.ஏ. ச. சந்திரன் பணிக்கு அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தாா்.