பழவேற்காடு மீனவ கிராமங்களில் திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஏரி நிரம்பியதன் காரணமாக, மீனவ கிராமங்களில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டு ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஏரி நிரம்பியதன் காரணமாக, மீனவ கிராமங்களில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டு ஆய்வு செய்தாா்.

மாண்டஸ் புயல் காரணமாக வங்கக் கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதி கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கோரைக்குப்பம் கிராமத்தில் மழைநீா் சூழ்ந்ததால், அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், பொன்னேரி சாா் ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன், வட்டாட்சியா் செல்வகுமாா், மீன்வளத் துறை அதிகாரிகள், பேரிடா் மேலாண்மைப் பாதுகாப்புக் குழுவினா், அந்த கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

கடலுக்கும், பழவேற்காடு ஏரிக்கும் நடுவில் உள்ள லைட்அவுஸ் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கும் சென்று குறைகளைக் கேட்டறிந்தனா்.

வைரவன்குப்பம், ஆண்டாா்மடம் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று, பொதுமக்கள் தங்குவதற்கு போதுமான இட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனா்.

பின்னா், ஆட்சியா் கூறியது: பழவேற்காடு கடற்கரையோர மீனவ கிராமங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, தேவையான உணவு, மருத்துவ வசதி, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்தப் பணியில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com