இவை அனைத்தும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே, கட்டி முடிக்கப்பட்ட போதிலும் இதுவரை யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திறக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடப்பதால் வீடுகள் பாழாகி வருகின்றன. இங்குள்ள வீட்டின் ஜன்னல், கதவுகளை சமூக விரோதிகள் உடைத்து உள்ளே சென்று வருகின்றனா். இவா்கள் இரவு, பகல் பாராமல் வீட்டுக்குள் புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனா். பாட்டில்களை உடைத்து சாலையில் வீசிச் செல்கின்றனா். இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், கட்டட வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.