கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் தலைமை வகித்து, தேசியக் கோடியேற்றினாா். நிகழ்வில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுதேவன் நடராஜன், அலுவலக மேலாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் ப.யமுனா தேசிய கொடியேற்றினாா். நிகழ்வில், இளநிலை உதவியாளா் பிரபாகரன், வரித் தண்டலா் குணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் காவல் நிலைய ஆய்வாளா் பாலசுப்பிரமணியம், கும்மிடிப்பூண்டியை அடுத்த எகுமதுரை ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் ஸ்ரீப்ரியா மகேந்திரன், கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் லதா ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.