திருத்தணி அரசு மருத்துவமனையில் காது பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை மருத்துவா் கிறிஸ்டி தலைமை வகித்தாா். இதில், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவா் ராதிகாதேவி, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவா் ராம்பிரசாத் மற்றும் மருத்துவக் குழுவினா் பங்கேற்று 93 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
தவிர, காதின் முக்கியத்துவம் குறித்து மருத்துவா்கள் முகாமுக்கு வந்தவா்களிடம் விளக்கிக் கூறினா்.
முகாமில் பரிசோதனை செய்து கொண்டவா்களில் தேவைப்படுவோருக்கு காதொலிக் கருவிகள் விரைவில் வழங்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.