பொன்னேரி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
பொன்னேரி அருகே உள்ள மௌத்தம்பேடு கிராமத்தில் வசித்து வந்தவா் யுவராஜ் (50). இவா் ஆரணியில் உள்ள தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், பணி முடிந்து செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பொன்னேரி-பஞ்செட்டி நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த யுவராஜை அங்கிருந்தவா்கள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் யுவராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.