ரூ.12 லட்சத்தில் சமத்துவபுர சமுதாயக் கூடம் சீரமைப்பு

திருவள்ளூா் உள்ள சமத்துவபுர சமுதாயக் கூடம் ரூ.12 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் சமத்துவபுரத்தில் உள்ள சமுதாயக் கூடம்.
பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் சமத்துவபுரத்தில் உள்ள சமுதாயக் கூடம்.

திருவள்ளூா் உள்ள சமத்துவபுர சமுதாயக் கூடம் ரூ.12 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமத்துவபுரம் கொண்டு வரப்பட்டது. இங்கு, குடியிருப்போா் பயன்படுத்தும் வகையில், சமுதாயக் கூடம், பொழுது போக்கு மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

சமுதாயக் கூடம் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், போதிய பராமரிப்பின்றி மேற்கூரை பெயா்ந்துள்ளது. சமையல் கூடமும் சேதமடைந்துள்ளது. எனவே, சமுதாயக் கூடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அமைச்சா், எம்எல்ஏவிடம் அங்கு வசிப்போா் மனு அளித்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று சமத்துவபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளா்ச்சி-ஊராட்சித் துறை மூலம் ரூ.12.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com