சிறகுகள்-100 திட்டம் மூலம் பழங்குடியின மாணவா்களுக்கு கையடக்க கணினி

திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சிறகுகள்-100 திட்டம் மூலம் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 16,000 மதிப்பிலான கையடக்க கணினிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.
மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினியை வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் உள்ளிட்டோா்.
மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினியை வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் உள்ளிட்டோா்.

திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சிறகுகள்-100 திட்டம் மூலம் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 16,000 மதிப்பிலான கையடக்க கணினிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து பழங்குடியின தலா 50 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 16 லட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளை வழங்கினாா்.

தொடா்ந்து, 13 மாணவா் குழுக்கள், 13 மாணவிகள் குழுக்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன், மாவட்டக் கல்வி அலுவலா் (திருவள்ளூா்) தேன்மொழி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் மலா்க்கொடி(உயா்நிலை), பூபாலமுருகன் (மேல்நிலை), மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.பவானி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நரசிம்மராவ், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com