திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா

திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா

திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

முன்னதாக கோயில் வளாகத்தில் யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் கஜலட்சுமி அம்மையாா் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. வரும் 6-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு உற்சவா் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பின்னா், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது.

அதேபோல், திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜையுடன் நவராத்திரி விழா தொடங்கியது.

காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூலவா் அம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும், கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com