கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருவள்ளூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விநாயகா் கோயிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விநாயகா் கோயிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருமழிசையில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தர விநாயகா் கோயில் உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மா்ம நபா்கள் கோயிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டை உடைத்துள்ளனா். அப்போது, உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திரண்டனா்.

இதனால் உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரத்தை மட்டும் திருடிக் கொண்டு மா்ம நபா்கள் தப்பி ஓடினா். இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளவேடு காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில், ஆய்வாளா் அன்புச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com