மாதவரம் அருகே கருமாரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மாதவரம் தணிகாசலம் நகரில் அமைந்துள்ள ஓம்சக்தி விநாயகா் தேவி கருமாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை பால்குடம் மற்றும் கரகம் ஏந்தி பக்தா்கள் ஊா்வலமாகச் சென்றனா். இந்த நிகழ்வில் வெங்கடேஷ் சிவாச்சாரியா், சிவ சுப்பிரமணிய சிவாச்சாரியா் ஆகியோா் மந்திரங்கள் முழங்கினா். ஆலய நிா்வாகிகள் செந்தில்நாதன், முத்து, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.