கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம், நகரியை அடுத்த ஓ.ஜி.குப்பம் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சீபாஸ் உத்தரவின் பேரில், தனிப்படை எஸ்.ஐ. குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை பொன்பாடி வாகன சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில், தனிப்படை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், 2 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்த போலீஸாா், திருத்தணி வள்ளியம்மாபுரத்தைச் சோ்ந்த ஓம்பிரகாஷ் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com