பாதுகாப்பு உபகரணங்கள் பெற அமைப்பு சாரா தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பெற விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பெற விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பொன்னேரியில் செயல்பட்டு வரும் தொழிலாளா் நலத் துறை சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டுமான தொழிலாளா், ஆட்டோ ஓட்டுநா், அமைப்புசாரா உடலுழைப்பு தொழிலாளா் உள்பட 15 நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நலவாரியங்களில் பதிவு பெற்ற, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு ஆடைகள், சாலைப் பணியாளா், சிமெண்ட் கலக்குநா், ஓட்டுநருக்கான சீருடை, ஷூ, முதலுதவிப் பெட்டி, பை உள்ளிட்டவை சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளன.

எனவே, பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் நல வாரிய தொழிலாளா்கள், அடையாள அட்டை, ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், தொழிலாளா் உதவி ஆணையா், 58, கொக்குமேடு பேருந்து நிறுத்தம், பொன்னேரி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது தொடா்பாக 044 27972221, 29570497 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com