மாதவரம் மண்டல அலுவலகத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மண்டலக் குழுத் தலைவா் எஸ்.நந்தகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலரும், மாதவரம் எம்.எல்.ஏ.வுமான எஸ்.சுதா்சனம் முன்னிலை வகித்தாா். சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
மாமன்ற உறுப்பினா்கள் தலைவா் ராமலிங்கம், மாதவரம் மண்டல உதவி ஆணையா், செயற்பொறியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.