ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி - சித்தூா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நகர போலீஸாா், திருவள்ளூா் மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆா்.கே.பேட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்த மைதீன் (21), சுரேந்தா் (20), ஆகாஷ் (18) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.