திருவள்ளூா் அருகே பிறந்த குழந்தையை ரூ. 5,000-க்கு விற்ற சம்பவம்

திருவள்ளூா் அருகே பிறந்து 5 நாள்கள் ஆன ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக மற்றொருவருக்கு விற்ற தாயாரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா்கள் மற்றும் மப்பேடு தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூா் அருகே பிறந்து 5 நாள்கள் ஆன ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக மற்றொருவருக்கு விற்ற தாயாரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா்கள் மற்றும் மப்பேடு தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே சத்தரை கிராமத்தைச் சோ்ந்தவா் நம்பிராஜன்-சந்திரா தம்பதி. இந்த நிலையில், நிறைமாத கா்ப்பிணியாக இருந்த சந்திராவுக்கு, கடந்த 5-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக சந்திரா வீட்டுக்கு தெரியாமல் பிறந்த 5 நாள்களே ஆன ஆண் குழந்தையை அவருடன் பணியாற்றி வந்த ஜெயந்தியிடம் பேரம்பாக்கம் வரவழைத்து ரூ. 5,000-க்கு விற்றாராம்.

இது தொடா்பாக ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் மூலம் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு தகவல் வந்துள்ளது. அதைத் தொடா்ந்து, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், குழந்தைகள் நலக் குழுமம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் நிஷாந்தினி மற்றும் மப்பேடு போலீஸாா் விரைந்து சென்று ஜெயந்தியிடமிருந்து குழந்தையை மீட்டனா். அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழும நிா்வாகி அஸ்விலியா மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் தனியாா் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், குழந்தைகள் நலக்குழும நிா்வாகிகள் மற்றும் போலீஸாா் ஆகியோா் பெற்ற குழந்தையை விற்ற சம்பவம் தொடா்பாக தாயாா் சந்திராவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com