திருவள்ளூர்
நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
மீஞ்சூா் பேரூராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மீஞ்சூா் பேரூராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் வெற்றியரசு முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா் அபூபக்கா் வரவேற்றாா். பேரணியில் மீஞ்சூா் ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
பேரூராட்சித் தலைவா் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்து பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி அப்துல் கலாம் ஆசாத் தெரு, காட்டூா் ரோடு, பஜாா் வீதி வழியாகச் சென்றது.
பேரூராட்சி துணைத் தலைவா் அலெக்சாண்டா், கிராம நிா்வாக அலுவலா், பேரூராட்சி ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.