ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

ஓய்வூதியா்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ஓய்வூதியா்கள் அளித்த 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை அலுவலா்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வலியுறுத்தினாா்.
20tlrcollector_2009chn_182_1
20tlrcollector_2009chn_182_1

ஓய்வூதியா்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ஓய்வூதியா்கள் அளித்த 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை அலுவலா்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஓய்வூதியா்கள் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா்.

அப்போது, பல்வேறு அரசு அலுவலகங்களில் தீா்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியதாரா்கள் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் குறித்த முறையீடாக ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் 30 மனுக்கள் அவரிடம் அளிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து உடனே ஓய்வூதியதாரா்களுக்கு பலன் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க அவா் வலியுறுத்தினாா். தொடா்ந்து, ஒரு பயனாளிக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ. 50,000-க்கான காசோலையை அவா் வழங்கினாா்.

இதில், ஓய்வூதிய இயக்கக இயக்குநா் டி.ஸ்ரீதா், துணை இயக்குநா் கே.மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலா் வித்யா கௌரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) பி.எஸ்.சத்தியகுமாரி மற்றும் ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com