சாலை விபத்தில் பள்ளி மாணவர் பலி: இருவர் காயம்

ஆவடி அருகே சாலை விபத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

ஆவடி அருகே சாலை விபத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.
 ஆவடி, கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் பிரிதீஷ் (17). அதே பகுதியைச் சேர்ந்த மசூதி தெருவைச் சேர்ந்த ரவி மகன் காமேஷ் (17), ஆனந்தன் மகன் அபீத்ராஜ் (17) ஆகியோர் நண்பர்கள். இதில், திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த காமேஷ் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களான பிரிதீஷ், அபீத்ராஜ் ஆகியோருடன் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
 இவர்கள் ஆவடி அடுத்த கண்ணப்பாளையம்- செங்குன்றம் நெடுஞ்சாலை வெள்ளானூர் பகுதியில் சென்றபோது, நிலைதடுமாறி மழைநீர் வடிகால் சிலாப் மீது மோதி, தூக்கி வீசப்பட்டனர்.
 இதில், படுகாயம் அடைந்த மூவரில், தலையில் பலத்த காயமடைந்த காமேஷ் அதே இடத்திலேயே உயிரிழந்தார். பிரிதீஷ், அபித்ராஜ் ஆகிய இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, ஆவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com