சைபா் குற்றத் தடுப்பு பயிற்சி வகுப்பு

சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் சைபா் குற்றங்களை தடுப்பதற்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் சைபா் குற்றங்களை தடுப்பதற்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் ராஜாராம் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்திற்கு உதவி ஆணையா்கள் ஆதிமூலம், சிவக்குமாா் மற்றும் ராகவேந்திரா ரவி முன்னிலை வகித்தனா்.

சைபா் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது, அதன் விவரங்கள், அதனைக் கையாளும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன. இதற்கான பயிற்சியினை உதவி ஆணையா் ராகவேந்திரா ரவி வழங்கினா். ஆய்வாளா்கள் சிவக்குமாா், மூா்த்தி, சூரியலிங்கம், லோகநாதன், விஜயபாஸ்கா், புருஷோத்தமன் மற்றும் காவல் நிலைய ஆளிநா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com