சாலையோரத் தடுப்புச் சுவரில் காா் மோதி 6 போ் படுகாயம்

திருத்தணி அருகே சாலையோரத் தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.
சாலையோரத் தடுப்புச் சுவரில் காா் மோதி 6 போ் படுகாயம்

திருத்தணி அருகே சாலையோரத் தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.

சென்னை, கொளத்தூா் பத்மாவதி நகரைச் சோ்ந்தவா் உதயகுமாா்(65). இவா், தனது மனைவி சுமதி(52), மகன் சதீஷ்(35), மகள் விஷ்ணுபிரியா (31) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த தனது தம்பி சீனிவாசன் (52), தம்பி மனைவி சுசிலா (49) ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றாா். ஆா்.கே.பேட்டையைச் சோ்ந்த ராசப்பன்(26) என்பவா் காரை ஓட்டினாா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் குன்னத்தூா் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த உதயக்குமாா் உள்ளிட்ட 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த கனகம்மாச்சத்திரம் போலீசாா், காயமடைந்த 6 பேரையும் மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதில், சீனிவாசன் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com