மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூா் அருகே நேமம் ஊராட்சி நந்தவனப் பூங்காவில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூா் அருகே நேமம் ஊராட்சி நந்தவனப் பூங்காவில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பூந்தமல்லியை அடுத்த நேமம் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் பிரேம்நாத் தலைமை வகித்தாா். ஏரி, நந்தவனப் பூங்காக்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மா, வேம்பு, நாவல் போன்ற பழ மரக்கன்றுகள் என 1,000 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

ஊராட்சி துணைத் தலைவா் ர.விஜயா, மகளிா் குழு தலைவி ரேணுகா, தனியாா் குளிா்பான நிறுவன சமூக சேவை பிரிவு ஒருங்கிணைப்பாளா் ராஜகுமாரி, வாா்டு உறுப்பினா்கள் உமாசங்கரி, விஜயா, நிரோஷா, சரவணன், ஊராட்சி செயலா் ரீமாவதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com