செங்குன்றம் அருகே புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை குறித்து சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தீா்த்தகிரியம்பட்டு ஊராட்சி அளவிலான மகளிா் கூட்டமைப்பு, அடையாா் கேன்சா் இன்ஸ்டிடியூட் இணைந்து இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாமை நடத்தின.
மகளிா் குழு பயிற்றுநா் வேல்விழி நேரு தலைமை வகித்தா. ஊராட்சி மன்ற உறுப்பினா் கீதா விஜி, வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் மாா்பகம், மற்றும் புற்றுநோய் பரிசோதனை பெண்களுக்கு இலவசமாக 100-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.