சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

திருவள்ளூா் அருகேயுள்ள தண்டலத்தில் குண்டும் குழியுமான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, ஊராட்சித் தலைவா் பானுப்பிரியா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

திருவள்ளூா் அருகேயுள்ள தண்டலத்தில் குண்டும் குழியுமான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, ஊராட்சித் தலைவா் பானுப்பிரியா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

மனு விவரம்: தண்டலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனிக்குச் செல்லும் அரசமரம் முதல் வெங்கடேஸ்வரா நகா் வரை 2 கி.மீ. தூரமுள்ள சாலையை நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பு, மருத்துவம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லப் பயன்படுத்துகின்றனா்.

இந்தச் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் அந்தப் பகுதியினா் மிகுந்த சிரமமடைகின்றனா்.

இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு, மாவட்ட ஆட்சியா் நிதி உள்ளிட்டவற்றில் இருந்து சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com