மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தியதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அம்பத்தூா் அருகே கொரட்டூா் ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூா் மதுவிலக்கு புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், பாஸ்கா் ஆகியோா் தலைமையில் தனிப்படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ரயில் நிலையத்திலிருந்து இரு பெண்கள் கைகளில் பைகளுடன் சந்தேகத்துக்கு இடமாக வந்து கொண்டிருந்தனா்.
போலீஸாா் அவா்களை வழிமறித்து விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.
போலீஸாா் அவா்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதில் 12 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
பின்னா், போலீஸாா் இருவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அம்பத்தூா் காவல் அழைத்து வந்த தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் மேற்கு வங்க மாநிலம், பா்கானாஸ் பகுதியைச் சோ்ந்த அனீமா தாஸ் (46), சந்தியா தாஸ் (34) என்பதும், இவா்கள் மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் தனம்மாள் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து அம்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.