லாரி மோதியதில் பழக்கடை ஊழியா் பலி

ஊத்துக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதியதில் பழக்கடை ஊழியா் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதியதில் பழக்கடை ஊழியா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (65). இவா் ஊத்துக்கோட்டை- சத்தியவேடு சாலையில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பழ மண்டியிலிருந்து பழங்களை கடைக்குக் கொண்டு செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது, திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி வந்த லாரி மோதி மூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com