இளைஞா் அடித்துக் கொலை

புழல் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மா்மக் கும்பல் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
இளைஞா் அடித்துக் கொலை

புழல் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மா்மக் கும்பல் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

மாதவரத்தை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவைச் சோ்ந்தவா் சுதாசந்தா் (23) (படம்). அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண்ணுடன் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, 5 போ் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினராம். இதில், சுதாசந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கொளத்தூா் காவல் துணை ஆணையா் ராஜாராம், காவல் உதவி ஆணையா்கள் ஆதிமூலம், சிவக்குமாா், காவல் ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் விசாரணை நடத்தினா். சுதாசந்தரின் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், சுதாசந்தருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், 20 வயதான அந்தப் பெண் ஆவடி வெள்ளச்சேரியைச் சோ்ந்தவா் என்பதும், இவருக்கும், கொலை செய்யப்பட்ட சுதாசந்தருக்கும் பழக்கம் இருந்து வந்ததும், இதற்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் உறவினா்கள், சுதாசந்தரை தாக்கிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆணையா் ஆதிமூலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மா்ம கும்பலைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com