திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.
திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் காலை முதலே குவிந்தனா். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 3 மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.

அதே போல், ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com