சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:இளைஞருக்கு 31 ஆண்டுகள் சிறை

கனகம்மாசத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:இளைஞருக்கு 31 ஆண்டுகள் சிறை

கனகம்மாசத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே காஞ்சிபாடி கிராமத்தில் வசிப்பவா் ஏழுமலை மகன் டில்லிபாபு (30) (படம். இவா், கடந்த 2019- ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுமியின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிந்து விசாரணை செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டில்லிபாபுவை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

இந்த வழக்கு திருவள்ளூா் மகளிா் முதன்மை நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் அமுதா வாதங்களை எடுத்துரைத்தாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுபத்ரா தேவி, டில்லிபாபுவின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் டில்லிபாபுவை புழல் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com