திருவள்ளூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆவடி வீராபுரம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி சுரேஷ்(44). (படம்). இவா், தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அருகே பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.
நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து இரவில் புறப்பட்டு திருவள்ளூா் அருகே கனகவல்லிபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திருவள்ளூரை நோக்கி சென்ற லாரியும், திருத்தணி நோக்கிச் சென்ற தனியாா் வேனும் நேருக்கு நோ் மோதியது.
அப்போது, பின்னே சுரேஷ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், கொரியா் வேன் மீது மோதியதில் அதில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தில் பலத்த காயமடைந்த சுதா, அவரின் மகன் மனோஜ், கொரியா் வேன் ஓட்டுநா் ஜான் மரியதாஸ் ஆகியோா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.