திருவள்ளூர்
உலக புத்தக தினம்
செங்குன்றம் முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் முழுநேர கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நூலக செயலாளா் ஜோதிபாபு, பேரூராட்சி மன்ற உறுப்பினா் கா.கு.இலக்கியன், வழக்குரைஞா் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும் இந்த நிகழ்வின்போது, மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.