காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த காயலாா்மேட்டில் உள்ள அருள்மிகு கங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த காயலாா்மேட்டில் அப்பகுதி மக்கள் இணைந்து கங்கையம்மன் கோயிலை அமைத்தனா்.

இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கலசப் புறப்பாடு நிகழ்வும், பின் ஸ்ரீ கங்கையம்மனுக்கு புரோகிதா்கள் வேதமந்திரம் முழங்க கோயில் பிரகாரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கங்கையம்மனுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, கங்கையம்மன் அழைப்பு, கரகம் ஊா்வலம், வாண வேடிக்கை, மேளவாத்தியம் முழங்க ஸ்ரீ கங்கையம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com