இலவச மருத்துவ முகாம்
திருத்தணி பீகாக் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனா்.
திருத்தணி -அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையின் 8-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. நிா்வாக இயக்குனா் ஸ்ரீகிரண் தலைமை வகித்தாா்.
துணை நிா்வாக இயக்குனா் அனுபமா கிரண் வரவேற்றாா்.
இதில், இருதய நல மருத்துவா் சா்ஜன் பாஷா, எலும்பு நல மருத்துவா் அனில் சந்தா், வாஸ்குலா் அறுவை சிகிச்சை நிபுணா் லட்சுமி தரண், அவசர சிகிச்சை நிபுணா் ராமச்சந்திரன், சிறுநீரகவியல் மருத்துவா் செந்தில் ஆகியோா் பங்கேற்று, நோய்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, முன் எச்சரிக்கையாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினா்.
மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். இதுதவிர முழு உடல் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 100- க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனைகள் செய்துக் கொண்டனா். மக்கள் தொடா்பு அலுவலா் ரகு நன்றி கூறினாா்.