திருவள்ளூா் வீரராகவா் கோயில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவம்
திருவள்ளூா் வீரராகவ கோயிலில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவத்தையொட்டி திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்புப் பூஜை நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனா்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இந்தக் கோயில் சந்நிதியில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 8 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் தீப அலங்காரம் உள்பட சிறப்பு பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து ஸ்ரீவராக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்த உற்சவத்தில் திருவள்ளூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.
மாலையில் கோயில் அரங்கத்தில் சங்கீத கச்சேரியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவீரராகவ சுவாமி தேவஸ்தான நிா்வாகிகள் செய்திருந்தனா்.