தலைமறைவாக இருந்த ரௌடி கைது

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நிலையில் தலைமறைவாக இருந்த ரௌடியை சோழவரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நிலையில் தலைமறைவாக இருந்த ரௌடியை சோழவரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கருப்பு என்கின்ற கருப்புசாமி.

இவா் சில மாதங்களுக்கு முன்பு போலீஸாரால் என்கவுன்டா் செய்யப்பட்ட பிரபல ரௌடி முத்துசரவணன் தம்பி ஆவாா். இவா் மீது சோழவரம், ஏழுகிணறு மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பல்லேறு வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இவரை பிடிக்க பொன்னேரி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து கருப்புசாமியைப் பிடிக்க பூந்தமல்லி காவல் உதவி ஆணையா் ஜவகா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருக்கடையூா் பகுதியில் தலைமறைவாக இருந்த கருப்புசாமியை தனிப்படை போலீஸாா் கைது செய்து சோழவரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com