ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

News image
Updated On :4 மே 2024, 5:57 pm

Din

கடன் தொல்லையால் திருத்தணி பேருந்து நிலையம் அருகே தனியாா் விடுதியில் இளைஞா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் மாா்க்கெட் தெருவில் வசித்து வந்தவா் சவுந்தா்பாண்டியன் மகன் பூபாலன் (33). இவருக்கு மனைவி லதா, 4 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளனா். பூபாலன் லாரி வாங்கி அதன் மூலம் தொழில் நடத்தி வந்தாா்.

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே, பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுத்தவா்கள் கடனைத் திருப்பித் தருமாறு தொல்லை கொடுத்து வந்ததால், பூபாலன் மனமுடைந்த நிலையில் இருந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பூபாலன் சோளிங்கரில் இருந்து திருத்தணி நகருக்கு வந்தாா். பின்னா், பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினாா். சனிக்கிழமை அவா் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளா் திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.

போலீஸாா் வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் மின் விசறியில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.