திருவள்ளூர்
5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
மீஞ்சூா் பேருந்து நிலையத்தில் 5 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இளைஞரை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
மீஞ்சூா் பேருந்து நிலையத்தில் 5 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இளைஞரை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விலக்கு பிரிவு போலீஸாா் மீஞ்சூா் புதிய பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா்.
அவா் கேரள மாநிலத்தை சோ்ந்த அவுஸ் அப்துல் (29) என்பதும், 5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்க்கு வைத்திருந்தும் தெரிந்தது.
இதையடுத்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.