திருவள்ளூர்
வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை
செங்குன்றம் அடுத்த வடகரை அரசு பள்ளி மாணவா்கள் 8 பாடங்களில் முழுதோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
செங்குன்றம் அடுத்த வடகரை அரசு பள்ளி மாணவா்கள் 8 பாடங்களில் முழுதோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதி திராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 473 மதிப்பெண்கள் பெற்று ஏ.சதீஷ் முதலிடத்தையும், 413 மதிப்பெண்கள் பெற்று தனுஷ் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். மேலும் இப்பள்ளியில் ஆங்கிலம், கணிதம், உயிரியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வணிகவியல், கணக்குப் பதிவி யல் ஆகிய 8 பாடங்களில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மேலும் வரும் கல்வியாண்டில் அனைத்து பாடங்களிலும் முழுதோ்ச்சி பெற பாடுபடுவோம் என தலைமை ஆசிரியா் கிருஷ்ணன்குட்டி தெரிவித்தாா்.