காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்ட முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, அதிமுக தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் வரவேற்றார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, 5 பேருக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்கள், 5 பேருக்கு பிறப்புச் சான்றுகள் உள்பட மொத்தம் 54 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

முன்னதாக, மருத்துவ முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இதில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் ஆர்.அன்பரசு, திருவண்ணாமலை நகர அதிமுக செயலர் ஜெ.எஸ்.செல்வம் மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சியில்...: தொடர்ந்து, திருவண்ணாமலையை அடுத்த காஞ்சியில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், 2,830 பயனாளிகளுக்கு ரூ.2.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com