திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். நல் நூலகர்கள் கிருஷ்ணன், சாயிராம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பொ.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், நூலகவியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய நூலகத் தந்தை என்று போற்றப்படும் அரங்கநாதன் வழியில் நூலகர்கள் சென்று இளைஞர் சமுதாயத்துக்கு நல்வழி காட்ட வேண்டும் என்றார்.
ஓய்வு பெற்ற தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெ.ராஜகோபால், நூலக ஆர்வலர் வாசுதேவன் ஆகியோர் பேசினர். இதில், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி நிறுவனர் கோ.தன்ராஜ், முதல் நிலை நூலகர் பெ.வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.