செய்யாறு வட்டம், புளூந்தை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (ஜூலை.19) நடைபெறுகிறது.
செய்யாறு வட்டம், புளூந்தை, தளரப்பாடி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் புளூந்தை கிராமத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் பானு தலைமை வகித்து, நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். ஏற்பாடுகளை வட்டாட்சியர் வி.ஜெயராமசந்திரன், வடதண்டலம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.