போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபுரீஸ்வரர் கோயிலில் யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் உலக நன்மைக்காவும், மழை வேண்டியும், கோயில் திருப்பணிக்காகவும் யாக பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, அனுக்ஞை, கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், கலச ஸ்தாபனம்,பிரகாரா வாஸ்து, வாஸ்து சாந்தி, யோகினி பலி, ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
யாக பூஜையில் வசூர், போளூர், காங்கேயனூர், குருவிமலை, அத்திமூர், மாம்பட்டு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.