சென்னை கவிமுகில் அறக்கட்டளை சார்பில், சென்னை மைலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது.
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய தலைகீழாகப் பார்க்கிறது வானம் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் வேளாண் துறை முன்னாள் இயக்குநர் மு.ராஜேந்திரன் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் பணமுடிப்பை கவிஞர் மு.முருகேஷிடம் வழங்கினார்.
கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், கவிமுகில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.