ஆன்மிக சத்சங்க விழா

திருவண்ணாமலையில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை சார்பில், ஆன்மிக சத்சங்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை சார்பில், ஆன்மிக சத்சங்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவர் பாபு தலைமை வகித்தார். இதையொட்டி, காலை 7 மணி முதல் 9 மணி வரை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நினைத்தாலே முக்தி தரும் என்ற தலைப்பில் சென்னை மு.பா.பாபு சொற்பொழிவு ஆற்றினார்.
நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை, ஜோதி வழிபாடு நடைபெற்றன. இதையடுத்து, வள்ளலாரின் தாரகமந்திரங்களை கூறி பக்தர்கள் வழிபட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்ன தானம், பிரசாதம் வழங்கப்பட்டன. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை திருவண்ணாலை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com