அரசு உருது தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா

செங்கம் காயிதே மில்லத் தெருவில் உள்ள அரசு உருது தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான பாரம்பரிய உணவுத் திருவிழா திங்கள்கிழமை  நடைபெற்றது.

செங்கம் காயிதே மில்லத் தெருவில் உள்ள அரசு உருது தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான பாரம்பரிய உணவுத் திருவிழா திங்கள்கிழமை  நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று, பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு கூழ்,  களி,  ரொட்டி,  கம்பு தானியத்தில் தயார் செய்யப்பட்ட கம்பு மாவு வடை,  கூழ்,  களி உள்ளிட்டவைகள், கீரை வகை உணவுகள் என பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளைச் செய்து பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில்  வைத்தனர்.
பின்னர், உணவு வகைகளைப் பார்வையிட்ட ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாரம்பரிய உணவு வகையில் உள்ள சத்துக்கள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
அதற்குச் சரியான  விடையளித்த மாணவர்களைப் பாராட்டியும், சிறந்த பாரம்பரிய உணவுகளைத் தயார் செய்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்வில், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், ரோட்டரி சங்கத்தின் பொருளாளருமான சர்தார்ரூல்லா கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கிபாராட்டிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள்,  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com