செங்கம் அருகே பணத் தகராறில் தந்தையை மதுப் புட்டியால் மகன் குத்தியது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செங்கத்தை அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு (65). இவர், ஆட்டுக் குட்டிகளை சந்தையில் விற்பனை செய்த பணத்தை அவரது மகன் சின்னதுரை கேட்டுள்ளார். வடிவேலு பணத்தை தர மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சின்னதுரை கையில் வைத்திருந்த மதுப் புட்டியால் வடிவேலுவின் வயிற்றில் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த வடிவேலு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பாய்ச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.